”எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள்” - தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார்

”எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள்” - தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார்
”எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள்” - தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார்

திருச்சியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி மதுரையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தூரைச் சேர்ந்த ராஜா மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும், பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி 200கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தரக்கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நோக்கி ஏராளமானோர் பேரணியில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஒத்தக்கடை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com