பெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - மத போதகர் கைது

பெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - மத போதகர் கைது
பெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - மத போதகர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மத போதகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு முடியகம்பை கிராம பகுதியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன். இவர் தனது சபைக்கு வரும் இளம் பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வருவதாகவும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் பெண்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், இதுதொடர்பாக தர்ம அமைப்பை சேர்ந்த நீலகிரி மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி என்பவர் சம்மந்தப்பட்ட மத போதகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அசோக் ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அசோக் ஸ்டீபன் ஆபாசமாக பேசியதும், பலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் செல்போனில் பேசியதும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக் ஸ்டீபனை கோத்தகிரி போலீசார் கைது செய்து குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com