பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியை பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் குராவலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்துவரும் சிறுமி ஒருவரை 3 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை அந்தச் சிறுமி பெற்றோர் உள்பட யாரிடமும் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி தெரிவித்தனர். அதன்பின்னரே சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.   

இதுகுறித்து விசாரிப்பதற்காக ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 6ஆம் தேதி அன்று  சிறுமிக்கும், பாலியல் வன்கொடுமை செய்த அபிஷேக் என்பவருக்கும் திருமணம் செய்து வைப்பது என பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவுக்கு உடன்படாத சிறுமியின் தாய், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த சிறுமி மெயின்புரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: திருத்தணி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com