சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கைது

பொள்ளாச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் எபினேசர் (74). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர், பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் எபினேசர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை போக்சோ நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com