போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய 2 டன் குட்கா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய 2 டன் குட்கா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய 2 டன் குட்கா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Published on

பொள்ளாச்சி அருகே கேரளாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா, உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் ஆனைமலை போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார், மற்றும் மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து கடத்திவந்து தமிழக பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ் (22), சத்யா (21), செந்தில் (43) அருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ (21)ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com