கர்நாடகாவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 42 மூட்டை குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

கர்நாடகாவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 42 மூட்டை குட்கா பறிமுதல் - ஒருவர் கைது
கர்நாடகாவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 42 மூட்டை குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து வேலூர் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள், வேலூர் மாநகருக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் சென்றது. அதை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 42 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரை ஓட்டிவந்த வாரணாசியைச் சேர்ந்த ராகுல் சுக்லா என்பவரை கைது செய்த பாகாயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com