மெரீனா கடற்கரையில் மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை - நண்பர்களால் நேர்ந்த கொடூரம்

மெரீனா கடற்கரையில் மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை - நண்பர்களால் நேர்ந்த கொடூரம்
மெரீனா கடற்கரையில் மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை - நண்பர்களால் நேர்ந்த கொடூரம்

மெரீனா கடற்கரையில் மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரை சாலை கண்ணகி சிலை அருகில் நடைபாதையில் அடையாளம் தெரியாத நபர் தலையில் வெட்டுபட்ட காயத்துடன் கிடந்துள்ளார். பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரீனா போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு பகுதியில் வெட்டுப்பட்டு மெரீனா கடற்கரை சாலைக்கு ரத்த காயத்துடன் வந்ததுள்ளதும், அவருக்கு வயது 40-க்கு மேல் இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அடையாளம் தெரியாததால் யார் அவர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் பச்சையப்பன் என்பதும், அவர் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இன்று அதிகாலையில் பச்சையப்பன் மதுபோதையில் தனது நண்பர்களுடன் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் தகராறில் ஈடுபட்டதில் மோதல் நடந்துள்ளது. அப்போது பச்சையப்பனை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு நண்பர்கள் தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

பச்சையப்பன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மது குடிப்பது தொடர்பாக பேட்டி அளித்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com