அதாவது தினசரி யுபிஐ எனப்படும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலமாக பங்குக்கு பெட்ரோல் போட வருபவர்கள் பணம் செலுத்துவர். இந்த கணக்கில் அதிகமாக பணம் வந்ததாக கணக்குக்காட்டி சிவ ஆனந்தி தினசரி பணம் எடுத்துள்ளார். அதாவது யுபிஐ மூலமாக அதிக பணம் பங்குக்கு வரவு வந்ததாக கணக்கில் வரவுவைத்து அங்கு விற்பனை மூலம் நேரடியாக வரும் பணத்தில் தினசரி சுமார் 30 ஆயிரம் வரை திருடிவிட்டு யுபிஐ அக்கவுண்டுக்கு வந்ததாக கணக்கில் எழுதிவிடுவார். இதுபோல் நான்கு மாதங்களாக எழுதிவைத்துள்ளார். வங்கியில் வரும் கணக்கை சரிவர கவனிக்காததால் சுமார் 27 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டது. இதனால் ஒன்றும் புரியாமல் கதிரவன் தவித்துள்ளார்.