திண்டுக்கல் லாக் அப் மரணம் - காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திண்டுக்கல் லாக் அப் மரணம் - காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
திண்டுக்கல் லாக் அப் மரணம் - காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திண்டுக்கல்லில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டி கோயிலில் திருவிழாவின்போது செந்தில் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கடந்த 05.4.2010 அன்று சுரேஷ் குமார் என்பவர் கொடுத்த புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி, ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாரை காவல் நிலையத்தில் வைத்து அடித்ததில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார்பு ஆய்வாளர் முத்துசாமி ஏட்டுகளான ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 6000 அபராதமும், ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு  தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com