ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் தொடர்பா? - வலுக்கும் விசாரணை

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் தொடர்பா? - வலுக்கும் விசாரணை
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் தொடர்பா? - வலுக்கும் விசாரணை

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது” என கூறியுள்ளார்.

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று (டிச 15) சுமார் 15 கிலோ தங்க நகைகள் தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் இன்று(டிச 16) மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் (IG) சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்குப் பிறகு சந்தோஷ் குமார் கூறுகையில், “இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார். மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது” என தெரிவித்தார்.

ச.குமரவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com