சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மித்லிஷ் குமார், துர்கா தேவி தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும், ஷியாம் என்ற 3 வயது மகனும் உள்ளனர். நேற்று பணியில் இருந்து வீடு திரும்பிய துர்கா, 3 வயது மகன் ஷியாம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்துவந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோனு ஆகியோர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.