முன்னதாக பழையூர் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நான்கு பேர் ஒன்றாக நடந்து சென்றதும், ஒருவர் மட்டும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த்தும் பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) என்பவரை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக முருகானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய நிலையில், மது அருந்தும் போது முருகானந்தன் நண்பர்களான சக்திவேல், பார்த்திபன் இருந்த நிலையில் மூவருக்கும் மதுவில் சயனைடு கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜசேகரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் வேறு எவரேனும் உள்ளனரா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.