பால் பாக்கெட்டுகளை திருடிவிட்டு தப்பிய நபர் : ஆட்டோவை விரட்டிப்பிடித்த போலீஸ்

பால் பாக்கெட்டுகளை திருடிவிட்டு தப்பிய நபர் : ஆட்டோவை விரட்டிப்பிடித்த போலீஸ்
பால் பாக்கெட்டுகளை திருடிவிட்டு தப்பிய நபர் : ஆட்டோவை விரட்டிப்பிடித்த போலீஸ்

ஆவடி அருகே பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற நபரின் ஆட்டோவை போலீஸார் விரட்டிப்பிடித்தனர்.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மற்றும் அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பால் பூத்களுக்கு அதிகாலையில் லாரிகள் மூலம் வழக்கம்போல பால் பாக்கெட்கள் வந்துகொண்டிருந்தனர். இவ்வாறு இறக்கப்படும் பால் பாக்கெட்களை அடையாளம் தெரிய நபர் அண்மைக்காலமாக திருடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மணிகண்டீசுவரன் என்பவருக்கு சொந்தமான பால் பூத்தில் இருந்த பால் பாக்கெட்டுகளை ஆட்டோவில் வந்த மர்ம நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அருகே இருந்த காவல் ரோந்து வாகனத்தில் இருந்த காவல்துறையினர் ஆட்டோவில் தப்பிய மர்ம நபரை துரத்தி பிடித்தனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர், திருவேற்காடு அடுத்த வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. இவர் கடந்த மூன்று மாதங்களாக பால் பாக்கெட்டுகளை திருடி விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com