14 வயது சிறுமிக்கு 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை - 11 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

14 வயது சிறுமிக்கு 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை - 11 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
14 வயது சிறுமிக்கு 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை - 11 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை மிரட்டி அக்கா கணவர் உட்பட 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 பேரில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கூலித்தொழிலாளியின் மகளான அந்த 14 வயது சிறுமி ஆறாவது வரை படித்துள்ளார். பின்னர் இந்த சிறுமி, தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தார். அவரை அக்காவுக்கு தெரியாமல் அவரது கணவர் சின்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்து, சின்ராஜின் நண்பர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். வீட்டு வேலைக்குச்சென்ற அந்த சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர், பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, நாய்சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் கொடுமை தாங்காமல், இவர்களின் மிரட்டலை மீறி, அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம்தேதி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியாவிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்துள்ளார். தலைமறைவான ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com