கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த பாஸ்கரன்-ஐஸ்வரியா தம்பதிக்கு மூன்று மாத இரட்டைக் குழந்தைகளான ஆண், பெண் உள்ளது. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இந்த இரட்டை குழந்தைகள், பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. வீடு திரும்பிய ஐஸ்வர்யா, தனது இரட்டை குழந்தைகள் காயங்களுடனும் மயக்க நிலையிலும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதும், பெண் குழந்தைக்கு கையில் முறிவு ஏற்பட்டதும் தெரியவந்தது.