இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை? சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை

இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை? சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை
இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை?  சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டதாக கருதப்படும் வழக்கில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து சென்று பார்த்த போது 90 விழுக்காடு எரிந்த நிலையில் கோபிநாத் கிடந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நாலூர் கிராமத்திலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com