நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து சென்று பார்த்த போது 90 விழுக்காடு எரிந்த நிலையில் கோபிநாத் கிடந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நாலூர் கிராமத்திலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.