பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் காவலர் மற்றும் சிறுமியின் தாய்மீது போக்சோ வழக்கு

பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் காவலர் மற்றும் சிறுமியின் தாய்மீது போக்சோ வழக்கு
பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் காவலர் மற்றும் சிறுமியின் தாய்மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணகுடி காவலர் மற்றும் சிறுமியின் தாய் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பணகுடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன். கன்னியாகுமரியை சொந்த ஊராக கொண்ட இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து தண்டனை மாறுதலாக கடந்த ஜனவரி மாதம் பணகுடி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஏற்கெனவே தனது மனைவியை பிரிந்து இருக்கும் இவர், கொடைக்கானல் குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி செல்வியை அவரது 13 வயது மகளுடன் அழைத்து வந்து சட்டவிரோதமாக பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை, தாயின் சம்மதத்துடன் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சர்ச்சில் அளித்த புகாரின் அடிப்படையில் பணகுடி காவலர் அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செல்வி ஆகியோர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள காவலர் அருள் ஜாக்சன் மற்றும் செல்வியை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com