சுண்ணாம்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கும், மதுரையை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நள்ளிரவில் நந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் பெட்ரோல் குண்டு வீசியதாக குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.