சாதி பாகுபாடு பார்த்ததாக பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அதிரடி சஸ்பெண்ட்!

சாதி பாகுபாடு பார்த்ததாக பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அதிரடி சஸ்பெண்ட்!
சாதி பாகுபாடு பார்த்ததாக பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அதிரடி சஸ்பெண்ட்!

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்த அனுராதா என்பவர், மாணவர்களிடம் சாதிப் பாகுப்பாடுகளை குறித்து பேசியதாக புகார் எழுந்த விவகாரத்தில் இரண்டு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்தவர்அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக கடந்த 18 ந் தேதி பேசியது. 19 ந் தேதி சமூக வளைதங்களில் வைரலாக பரவியது. மேலும் அந்த ஆடியோவில், 'முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா எனத்தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது. நீ என்ன கம்யூனிட்டி?’ என்று கேட்டு தமிழ்த்துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரியிடம் விளக்கம் கேட்டபோது, 'வரும் திங்கட்கிழமையன்று (ஆக.22) ஒழுங்கு நடவடிக்கை குழு பேராசிரியை அனுராதாவிடம் விசாரணை நடத்த இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கல்லூரி முதல்வர் கஸ்தூரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் துரைசாமி தமிழ்துறைத் தலைவர் அனுராதா 2 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில், `பச்சையப்பன் கல்லூரியின் உதவி பேராசிரியர் முத்துசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வரும் எஸ்சி, எஸ்டி குழுவினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பச்சையப்பன் கல்லூரியில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில் எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் நடைபெறுவதற்காக 2 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com