ஆன்லைன் சூதாட்டம்: ரூ.87 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது

ஆன்லைன் சூதாட்டம்: ரூ.87 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது
ஆன்லைன் சூதாட்டம்: ரூ.87 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக லட்சக் கணக்கான ரூபாயை ஏமாற்றியவரை நட்சத்திர ஓட்டலில் வைத்து கைது செய்தது சைபர் கிரைம் போலீசார். 

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில், ஆன்லைனில் பெட்டிங்கிற்காக சுமார் ரூ.87 லட்சத்தை கட்டி ஏமாந்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்து பிறகு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரை மகாபலிபுரம் ராடிசன் புளூ ஹோட்டலில் வைத்து சைபர் கிரைம் காவல் உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை நேற்று கைது செய்தது. கைதானவரிடமிருந்து சுமார் 193 கிராம் தங்க நகைகள், 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 10 செல்போன்கள், 1 ஐபேட், 1 லேப்டாப் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதோடு எம்ஜி ஹெக்டார் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், கைதான ஹரிகிருஷ்ணன், அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு, தனது தந்தையின் தொழிலான ஆன்லைன் சூதாட்ட புக்கிங்கை கையில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டம் பெட்டிங் மட்டுமின்றி கிரிக்கெட் மேட்ச் பெட்டிங்கிலும் புக்கியாக செயல்பட்டு சுமார் 25 முதல் 30 நபர்களிடம் பணம் பெற்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஹரிகிருஷ்ணன் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com