சேலம் அருகே வெடித்து சிதறிய மர்மப் பொருள்: ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே வெடித்து சிதறிய மர்மப் பொருள்: ஒருவர் உயிரிழப்பு
சேலம் அருகே வெடித்து சிதறிய மர்மப் பொருள்: ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே எஃப்எம் ரேடியோ போன்ற மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது தோட்டத்தில் எஃப்எம் ரேடியோ போன்ற மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனை தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்த மணி, இன்று பிற்பகல் அதைத் திறக்க முற்பட்டுள்ளார். பின்னர் மின்சார இணைப்பு கொடுத்து அதை சோதனை செய்ய முயன்றபோது அந்த பொருள் பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியுள்ளது.

இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபொழுது மணி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடன் இருந்த அவரது பேத்தி சௌரதி மற்றும் உறவினர்கள் வசந்தகுமார், நடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் விசாரணை மேற்கொண்டார். மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர், மேற்கூரை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்து உள்ளன. இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் வெடித்துச் சிதறியது வெடிபொருள் அல்ல; அந்தப் பொருள் குறித்து அறிவியல் ரீதியான ஆய்வு நடத்தப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com