மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - கல்லூரி மாணவர் கைது

மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - கல்லூரி மாணவர் கைது
மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - கல்லூரி மாணவர் கைது

மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாங்காட்டை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மாணவி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், அந்தக் கடிதத்தின் அடிப்படையில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

20-க்கும் மேற்பட்டோரிம் போலீசார் விசாரணை செய்த நிலையில் மாங்காட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி என்ற விக்னேஷ் என்பவரை 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். போக்சோ, பாலியல் வன் கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com