சிறுமியின் வயிற்றுவலியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை: பூசாரி போக்ஸோவில் கைது

சிறுமியின் வயிற்றுவலியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை: பூசாரி போக்ஸோவில் கைது
சிறுமியின் வயிற்றுவலியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை: பூசாரி போக்ஸோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியின் வயிற்றுவலி பிரச்சினையை சிறப்பு பூஜை செய்து குணப்படுத்துவதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய அதே பகுதியை சேர்ந்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்துள்ள 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனை அறிந்த அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரியாக இருக்கும் பழனி என்ற 65 வயது முதியவர் சிறுமியின் தாயாரை அணுகி தான் சிறப்பு பூஜை மூலம் அந்த சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்துவதாக கூறியுள்ளார். 

இதனை நம்பிய சிறுமியின் தாயும் அந்த சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி வீட்டிற்குள் தான் குறி பார்க்கும் அறையில் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று அந்த சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் ஆன நிலையில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பத்தாம் வகுப்பு சிறுமியின் வயிற்றுவலி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய கோயில் பூசாரியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com