பெண் கேட்டு கொடுக்காததால் 17 வயது சிறுமியை கடத்திய தாய், மகன் கைது! ஓமலூரில் பரபரப்பு

பெண் கேட்டு கொடுக்காததால் 17 வயது சிறுமியை கடத்திய தாய், மகன் கைது! ஓமலூரில் பரபரப்பு
பெண் கேட்டு கொடுக்காததால் 17 வயது சிறுமியை கடத்திய தாய், மகன் கைது! ஓமலூரில் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இளம் பெண்ணை கடத்தி சென்று பால்ய திருமணம் செய்து வைக்க முயன்ற தாயையும் மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள டேனிஸ்பேட்டை ஊராட்சியில் சின்ன ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள பையநத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும், அவரது மகன் ரமேஷ்குமாரும் சேர்ந்து பெண் கேட்டு வந்துள்ளனர். ஆனால், சிறுமியாக இருப்பதால் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை டேனிஷ்பேட்டைக்கு வந்த லட்சுமி மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் இருவரும் மீண்டும் சிறுமி இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கடைக்கு சென்ற சிறுமியை தாயும் மகனும் சேர்ந்து அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் சிறுமி கடத்தல் குறித்து சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பால்ய திருமணம் செய்து வைக்க கடத்திச்சென்ற லட்சுமியை கைது செய்தனர். இதனிடையே தாய் கைது செய்யப்பட்டதை அறிந்த சதீஷ்குமார், கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் சதீஷ்குமாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பால்ய திருமணம் செய்வதற்காக 17 வயது சிறுமியை கடத்தியது, வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com