திருமணமான 7 மாதத்தில் செவிலியர் விபரீத முடிவு - கணவருடனான கருத்து வேறுபாடு காரணமா?

திருமணமான 7 மாதத்தில் செவிலியர் விபரீத முடிவு - கணவருடனான கருத்து வேறுபாடு காரணமா?

திருமணமான 7 மாதத்தில் செவிலியர் விபரீத முடிவு - கணவருடனான கருத்து வேறுபாடு காரணமா?
Published on

நன்னிலம் அருகே திருமணமான 7 மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பண்டாரவாடை திருமாளம் நோக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருத்திகா. 29 வயதான இவர், பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய கணவர் கோபிநாத் திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தநிலையில், தற்போது வீட்டில் வேலையின்றி இருந்து வருகிறார்.

கிருத்திகாவுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிய நிலையில், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவிலியர் கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகத் தெரிகிறது.

பின்னர் அவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்த செவிலியர் கிருத்திகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து பேரளம் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com