தலையில் அடித்து, கழுத்தை அறுத்து புதைக்கப்பட்ட வடமாநில இளைஞர் - உ.பேட்டையில் அதிர்ச்சி!

தலையில் அடித்து, கழுத்தை அறுத்து புதைக்கப்பட்ட வடமாநில இளைஞர் - உ.பேட்டையில் அதிர்ச்சி!
தலையில் அடித்து, கழுத்தை அறுத்து புதைக்கப்பட்ட வடமாநில இளைஞர் - உ.பேட்டையில் அதிர்ச்சி!

உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் சொந்தமாக கட்டிவரும் அடுக்குமாடி வீட்டுக்கு டைல்ஸ் போடுவதற்காக கடந்த 3ஆம் தேதி மூவரை வேலைக்கு அழைத்திருக்கிறார். பீகார் மாநிலம் கமோல் பகுதியைச் சேர்ந்த பவன்குமார் என்பவர் அவருடைய நண்பர்கள் இருவருடன் அங்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். கடந்த 6ஆம் பவன்குமாருடன் வந்த வந்த ஒரு இளைஞர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் மற்றொரு வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

இதனிடையே பவன்குமாரின் உறவினர் சோனா சைனி என்பவர் பவன்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் சோனா சைனி இன்று காலை பூ.மாம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் வந்துள்ளார். அங்கு தேடிப் பார்த்தபோது பவன்குமார் இல்லாத நிலையில் அவர் வேலைசெய்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சோனா சைனி வீட்டின் உள்புறம் சென்று தேடிப்பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முகப்பு பகுதியில் பவன்குமாரின் ஆடைகள் ரத்தக் கறையுடன் கிடந்ததை பார்த்துள்ளார்.

இந்த தகவல் அந்த கிராமத்தில் தீயாக பரவிய நிலையில் உடனடியாக இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு கிராமத்தார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துசென்று பார்த்தபொழுது ரமேஷ் வீட்டின் ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அங்கு யாரேனும் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அதில் பவன் குமார் உடல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பவன்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது பவன்குமாரின் தலையில் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பவன்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் அவரை அடித்து கழுத்தை அறுத்து கொலைசெய்து புதைத்தது? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com