நிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்

நிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்

நிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்
Published on

நிர்மலாதேவி விவகாரத்தில் கைதாகியுள்ள ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமியை மதுரை அழைத்துச் சென்று அவர் தங்கியிருந்த அரையில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், பேராசிரியர் குமாரராஜன், பேராசிரியர் செல்வாஜ் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருவரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள், 2 ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை தொடர்ந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளர் முத்துசங்கரலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் கருப்பசாமியை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்று குறுக்கு விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com