போக்சோ வழக்கில் வடமாநில இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறை
உதகையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வட மாநில இளைஞருக்கு 45 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி கிளிஞ்ஜட பகுதியில் தனியார் தேயிலை தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ஓரவ் (31). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 27-11-17 அன்று 13 வயது பள்ளி சிறுமிக்கு விஜய் ஓரவ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், மகளிர் போலீசார் புகாரை விசாரித்து விஜய் ஓரவ் மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சஞ்செய் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்த விஜய் ஓரவ்க்கு 4 பிரிவுகளில் 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.