புதுச்சேரி: மதுக்கடையில் திருட்டை மறைக்க கொள்ளையர்கள் கையாண்ட புதிய உத்தி

புதுச்சேரி: மதுக்கடையில் திருட்டை மறைக்க கொள்ளையர்கள் கையாண்ட புதிய உத்தி

புதுச்சேரி: மதுக்கடையில் திருட்டை மறைக்க கொள்ளையர்கள் கையாண்ட புதிய உத்தி
Published on

மதுபானக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த திருடர்கள் இருவர், அதனை மறைக்க மீண்டும் சிமெண்ட் கொண்டு வந்து சுவரை சரிசெய்துவிட்டுச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரி சாரம் சந்தை பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகளுக்குப்பின் கடையைத் திறந்த உரிமையாளர், மதுபாட்டில்களை கணக்கெடுத்துள்ளார். அதில் 21 பெட்டிகள் குறைந்திருப்பது தெரியவந்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கடையின் பின்பக்க சுவரின் ஓரிடத்தில் புதிதாக சிமெண்ட் கலவை பூசப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக விவேகானந்தன், மணிகண்டன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் சுவரை துளையிட்டு திருடிய அவர்கள், இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க அங்கு சிமெண்ட் கலவை போட்டு சரிசெய்துவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com