தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை கடத்தல்

தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை கடத்தல்
தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை கடத்தல்

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண்குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பர்மா காலனியைச் சேர்ந்தவர் டைல்ஸ் வேலை பார்க்கக்கூடிய குணசேகரன். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார். இதனால் உறவினர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லாத நிலையில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட ராஜலட்சுமிக்கு 4 நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. பெண்கள் வார்டு என்பதால் அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் குணசேகரன் இரவு வெளியே சென்றிருக்கிறார். இன்று காலை அருகிலிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி, ராஜலட்சுமியை குளித்துவிட்டு வருமாறு அனுப்பிவிட்டு குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாகவே 45 வயது பெண்மணி ராஜலட்சுமியிடம் பேச்சுக் கொடுத்து வந்ததாகவும், அவருடைய விவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்திய பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com