\
திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டி கொலை

திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டி கொலை

திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டி கொலை
Published on

நெல்லை முன்னாள் மேயர் உமார் மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். 

திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நெல்லையின் ரெட்டியார்ப்பட்டியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியல் காரணமகா அல்லது சொத்து பிரச்னையா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com