மருதாணியுடன் வெட்டப்பட்ட கை! பெண் கொடூர கொலை..

மருதாணியுடன் வெட்டப்பட்ட கை! பெண் கொடூர கொலை..
மருதாணியுடன் வெட்டப்பட்ட கை! பெண் கொடூர கொலை..

நாமக்கல்லில் பெண்ணின் 2 கால்கள் மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருகே நல்லிகவுண்டன் புதூர் பகுதியில் புறவழிச்சாலை பாலத்தின் அடியில் பெண்ணின் 2 கால்கள் மற்றும் மருதாணி வைத்த நிலையில் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றை பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார், உடல் பாகங்களை வீசி சென்றது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கங்களை துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து விட்டு சில நாட்களுக்கு பிறகு இப்பகுதியில் வீசி சென்றிருப்பது காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடல் பாகங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட நிலையில் 3 ஆடுகளும் கண்டெடுக்கப்பட்டது. அவற்றையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com