நாமக்கல்: குடும்பத் தகராறில் தம்பி கொலை - அண்ணன்கள் இருவர் கைது

நாமக்கல்: குடும்பத் தகராறில் தம்பி கொலை - அண்ணன்கள் இருவர் கைது
நாமக்கல்: குடும்பத் தகராறில் தம்பி கொலை - அண்ணன்கள் இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடும்பத் தகராறில் இரு சகோதரர்கள் சேர்ந்து, உடன் பிறந்த தம்பியை கொலை செய்ததாக சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் ஆனந்தன் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆனந்தனின் மூன்றாவது மகன் குரு என்பவர் மதுபான பாரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மூத்த மகன்கள் கார்த்தி, அசோக் ஆகியோர் குருவை அடித்துள்ளனர்.

இதை பார்த்த தந்தை ஆனந்தன் தடுக்க சென்றுள்ளார். அப்போது ஆனந்தனை தள்ளிவிட்ட சகோதரர்கள் இருவரும் குருவின் தலையில் கற்களால் தாக்கியும் அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து குருவின் கழுத்துப் பகுதியை அறுத்துவிட்டும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குருவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குரு உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக், அசோக் ஆகிய இருவரையும் கைது செய்து இருவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இருவரும் சேர்ந்து குருவை தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com