நாகை: மூதாட்டி வசிக்கும் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை... போலீசார் விசாரணை

நாகை: மூதாட்டி வசிக்கும் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை... போலீசார் விசாரணை

நாகை: மூதாட்டி வசிக்கும் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை... போலீசார் விசாரணை
Published on

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரூ.23 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் நைனான்குத்தகையைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜகுமாரி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜகுமாரி பக்கத்து வீட்டில் படுத்து தூங்கி விட்டு அடுத்த நாள் வீட்டுற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த திருமாங்கல்யம், பிராங்காசு, மூக்குத்தி, மோதிரம் உள்பட 4 சவரன் நகைகள், ரூ. 23 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாய்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை குறித்து துப்புதுலக்க நாகையிலிருந்து மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com