ஆந்திர இளைஞர் கைது
ஆந்திர இளைஞர் கைதுpt desk

நாகை | வாகன சோதனையில் சிக்கிய 105 கிலோ கஞ்சா பறிமுதல் - ஆந்திர இளைஞர் கைது

வேதாரண்யம் அருகே ஆந்திராவில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திர இளைஞரை கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை சோதனை சாவடியில் ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் காவல்துறையினர்; ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த காரின் டிக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Arrested
Arrestedpt desk

விசாரணையில், ஆந்திராவில் இருந்து கோடியக்கiர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை காரில் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்;;;ண ரெட்டி என்பவரை வேதாரண்யம் காவல்துறையினர் கைது செய்;து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர இளைஞர் கைது
மத்தூர் | ஓடும் பேருந்தில் 6 பவுன் நகைகளை திருடியதாக பெண் உட்பட இருவர் கைது

மேலும் கஞ்சாவை கடத்தி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைப்பற்றபட்ட 105 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.21 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com