வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்
வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரின் மனைவி ஆக்னஸ்மேரி (85). இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிஸ்லாஸ் உயிரிழந்து விட்டதால் ஆக்னஸ்மேரி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வீட்டின் மேல்மாடி வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்த ஆக்னஸ்மேரி வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை ஒன்றை வைத்திருந்தார். இதை பார்த்த 2 மர்ம நபர்கள் ஆக்னஸ் மேரியிடம் வந்து வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து ஆக்னஸ்மேரி, அவர்கள் இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மர்மநபர்கள் திடீரென ஆக்னஸ் மேரியை நாற்காலியில் கட்டிப் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆக்னஸ்மேரி திருடன். திருடன்.. என கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் ஆக்னஸ் மேரியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின், 2 பவுன் வளையல், 1 பவுன் மோதிரம் என 5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து ஆக்னஸ் மேரியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கயிறை அவிழ்த்து விட்டனர். இது குறித்து ஆக்னஸ்மேரி தஞசை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com