கன்னியாகுமரி: பிபிஇ உடை அணிந்து எஸ்.ஐ. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்

கன்னியாகுமரி: பிபிஇ உடை அணிந்து எஸ்.ஐ. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்
கன்னியாகுமரி: பிபிஇ உடை அணிந்து எஸ்.ஐ. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியைச் சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் கார், இருசக்கர வாகனம் ஆகியவை தீப்பற்றி எரிந்தன.

களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செலின்குமாரின் வீட்டில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். இதில், காரும் இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்நிலையில், செலின்குமார் வீட்டில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் வந்த நிலையில், ஒருவர் பிபிஇ உடை அணிந்து, கார் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com