காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்: 85 பவுன் நகை கொள்ளை

காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்: 85 பவுன் நகை கொள்ளை

காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்: 85 பவுன் நகை கொள்ளை

நிலக்கோட்டை அருகே காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துரமேஷ். விளாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் இவர், தற்போது கொடைரோடு நெடுஞ்சாலையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

முத்து ரமேஷ் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், இன்று காலை அவரது வீடு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த முத்துரமேஷ் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோவில் 85 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில் முத்து ரமேஷ் புகார் அளித்தார்.

 புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் ஏட்டு வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com