கணவர் திடீரென இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி.. வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்

கணவர் திடீரென இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி.. வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்
கணவர் திடீரென இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி.. வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்

மேட்டூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (37). இவருக்கு புகழரசி (27) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி புகழரசி அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 37 வயதான சக்திவேல் திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் முத்துசாமி கொளத்தூர் காவல் நிலையத்தில், தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொளத்தூர் போலீசார், மர்மமான முறையில் உயிரிழந்த சக்திவேலின் பிரேதத்தை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சக்திவேலின் மனைவி புகழரசிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்துக்குமார் (29) என்ற இளைஞருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த கொளத்தூர் போலீசார் சக்திவேல் மனைவி புகழரசி மற்றும் முத்துக்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சக்திவேல் மனைவி புகழரசி அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை சக்திவேல் தன்னை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை புகழரசியும் முத்துக்குமாரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து புகழரசி அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை கொடுத்துள்ளார். இருந்தபோதும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து போன புகழரசி மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து சக்திவேலின் மனைவி புகழரசியைத் தொடர்ந்து முத்துக்குமாரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவனை, மனைவி கொடூரமாக கொலை செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com