திருமணமான 10 மாதத்திலேயே இளம்பெண் படுகொலை... கைதான கணவர் அளித்த வாக்குமூலம்

திருமணமான 10 மாதத்திலேயே இளம்பெண் படுகொலை... கைதான கணவர் அளித்த வாக்குமூலம்
திருமணமான 10 மாதத்திலேயே இளம்பெண் படுகொலை... கைதான கணவர் அளித்த வாக்குமூலம்

திருமங்கலம் அருகே இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கணவன் உட்பட 3 பேர் கைது -நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வீ.அம்மாபட்டி கண்மாயில் 18 வயது நிரம்பிய இளம் பெண் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம் பெண்ணின் கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வீ.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தவிடன் - முத்துலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகளான ஜெயசக்தி பாலாவுக்கும் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகிலுள்ள மத்திய சேனை கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் முத்துப்பாண்டிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது நிரம்பாததால் அருகிலிருந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு 18 வயது பூர்த்தி ஆகும் வரை பிரிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் ஜெயசக்தி பாலா தங்களது வீட்டில் வசித்து வந்தாக தந்தை தவிடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் இயற்கை உபாதைக்காக செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பல இடங்களில் தேடிவந்தனர் எங்கு தேடியும் கிடைக்காததால் சனிக்கிழமை காலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என முடிவு செய்து ஜெய்சக்தி பாலாவை தேடும் ,முயற்சியைக் கைவிட்டனர்.

சனிக்கிழமை அதிகாலை அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்மாய்க்குள் பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு கிராமத்தில் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் கிராம மக்கள் டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்து வந்த பேரையூர் சரக டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான போலீசார் இறந்த பெண்ணின் உடலை ஆய்வு செய்த போது 13 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இறந்து கிடந்த இளம்பெண் அருகில் செல்போனில் பயன்படுத்தக் கூடிய ஹெட்போன் மட்டுமே கிடைத்தது.
இறந்த இளம்பெண் பயன்படுத்திய செல்போன் கண்டுபிடிக்க படாததால் போலீசார் இறந்த பெண்ணுடைய செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், கொலை நடப்பதற்கு முன்பாக ஜெயசக்திபாலா தனது கணவருடன் பேசியது தெரிய வந்ததை அடுத்து போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, முத்துப்பாண்டி, ஜெயசக்தி பாலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முத்துப்பாண்டியின் உறவினர் மத்திய சேனை கிராமத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரது மகன் அருண்குமார் மதுரை மாப்பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக முத்துப்பாண்டி அளித்த வாக்குமூலத்தில் முத்துப்பாண்டி ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டார் சக்தி பாலாவை திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. திருமணமான பின்னரும் முத்துப்பாண்டி தான் காதலித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்த விஷயம் ஜெய்சக்தி பாலாவிற்கு தெரியவர கணவர் முத்துப்பாண்டியை கண்டித்துள்ளார்.

ஆனால் முத்துப்பாண்டி அந்த பெண்ணுடன் இருந்த தொடர்பை துண்டிக்காததோடு அந்தப் பெண்ணை வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு ஜெயசக்தி பாலா ஆமத்தூர் காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி மீது புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்த போது சக்திபாலாவிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வரவே இருவரும் பிரிந்து வாழும் படி அறிவுறுத்தியதால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார் முத்துப்பாண்டி.

இந்த நிலையில் கடந்த இரு மாதத்திற்கு முன்பு ஜெயசக்தி பாலாவின் சொந்த ஊரில் நடைபெற்ற விசேஷ வைபவத்திற்கு முத்துப்பாண்டி வந்ததாகவும் அப்போது முத்துப்பாண்டி காதுபட கிராமத்து இளைஞர்கள் சிலர் சக்திபாலாவை பற்றி தவறாக பேசியுள்ளனர். இதனால் முத்துப்பாண்டி ஆத்திரத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியானதால் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஞாயிறன்று இருவரையும் சேர்த்து வைக்க இருந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த முத்துப்பாண்டி ஜெயசக்தி பாலாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி தனது உறவினரான அருண்குமார் மற்றும் மதுரை மாபாளையத்தை சேர்ந்த ஹரிஷ் ஆகியோருடன் சேர்த்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹரிஷ் செல்போன் எண்ணிலிருந்து பேசி கண்மாய் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். தொடர்ந்து முத்துப்பாண்டி, அருண்குமார் இருவரும் கண்மாய்க்குள் மறைந்து கொண்டனர். இதனையடுத்து கண்மாய்க்கு வந்த ஜெய்சக்தி பாலாவை ஹரீஷ் கத்தியால் குததியதை தொடர்ந்து மறைந்திருந்த இருவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக முத்துப்பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஹரிஷ் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com