கோவை: மதுவிற்கு அடிமையான தந்தை.. மகனுடன் ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்த விபரீதம்!

கோவை: மதுவிற்கு அடிமையான தந்தை.. மகனுடன் ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்த விபரீதம்!
கோவை: மதுவிற்கு அடிமையான தந்தை.. மகனுடன் ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்த விபரீதம்!

கீரணத்தம் பகுதியில் குடிபோதையில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்ற மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவருடைய மனைவி ஜானகி. இவர்களது மகன் சுபாஷ் (வயது 25). இவர்களுக்கு ரூ.8 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுவிற்கு அடிமையான பழனிசாமி தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடமும், மகனிடமும் கடன் தொகையை நீங்கள்தான் கட்டவேண்டும் என்று கூறி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி மது அருந்திய நிலையில் அவரது மகன் சுபாஷும் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் மது போதையில் பழனிசாமியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் பழனிசாமி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு அருகிலுள்ள தாத்தா வீட்டிற்கு அம்மாவும், மகனும் தூங்க சென்றுள்ளனர். இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பழனிசாமியை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி ஜானகியும், மகன் சுபாஷும் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் பழனிசாமியை சோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

பின்னர், இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த போலீசார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தையை குடிபோதையில் அடித்துக்கொன்ற மகன் சுபாஷ் மற்றும் மனைவி ஜானகி உள்ளிட்டோரை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com