பெரும்பாக்கம்: நள்ளிரவில் இரு சக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள்!

பெரும்பாக்கம்: நள்ளிரவில் இரு சக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள்!
பெரும்பாக்கம்: நள்ளிரவில்  இரு சக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள்!

பெரும்பாக்கத்தில் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை கொளுத்திவிட்டு செல்லும் மர்ம நபர்கள் யார்? 20 நாட்களில் இரண்டாவது முறையாக நடந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்த அச்சம்.


சென்னை பள்ளிகரணை அடுத்த எழில் நகர், பெரும்பாக்கத்தில் உள்ள 8 அடுக்கு குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு 155 வது பிளாக்கிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.


இருசக்கர வாகனம் எரிவதை ஜன்னல் வழியாக கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 4 இருசக்கர வாகனங்களும் முழுமையாக எரிந்து தீக்கிறையானது.


விசாரணையில் நான்கு இருசக்கர வாகனமும் அருண், எட்வர்ட் ரீகன், அனிதா, கோபி, உள்ளிட்ட நான்கு பேருக்கு சொந்தமான வாகனங்கள் என தெரியவந்தது. இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்கள் யார் என தெரியவில்லை.


இப்பகுதியில் இதேபோல் கடந்த 28.07.2020 அன்றும் நள்ளிரவில் 113 வது பிளாக்கிற்கு வெளியில் நிறுத்தியிருந்த 7 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என இதுவரை கண்டிபிடிக்காத நிலையில் தற்போது 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பது தொடர் கதையாகி வருவதால் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பில்லாமல் போனதாக அப்பகுதி மக்கள் வருந்துகின்றனர். மேலும் தீ வைக்கும் மர்ம நபர்களை பள்ளிகரணை போலீசார் விரைந்து கைது செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com