நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டூழியம்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்

நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டூழியம்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்

நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டூழியம்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்
Published on

சேலத்தில் நள்ளிரவில் மருந்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மார்கெட் பகுதியில் மருந்துக் கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று முஸ்தபா வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு நள்ளிரவு அவரின் கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடையில் இருந்த 77 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதுடன், கடையின் வெளிப்புறமும், உள்புறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளை நடந்தற்கான தடயங்களை சேகரித்தனர். அப்போது கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com