தாயை கொன்ற மனநலம் குன்றிய மகன்

தாயை கொன்ற மனநலம் குன்றிய மகன்

தாயை கொன்ற மனநலம் குன்றிய மகன்
Published on

சென்னை வண்ணாரப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பெற்ற தாயை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் தனம். இவருடைய மகன் ஏழுமலை மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று மாலை ஏழுமலை வீட்டில் மாத்திரை சாப்பிட்டு படுத்துள்ளார். அப்போது சாப்பிடுவதற்காக தனம் ஏழுமலையை கூப்பிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை தாய் தனத்தை நெஞ்சில் கையால் ஓங்கி குத்தியுள்ளார். இதில் தனம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடி போஜராஜன் நகர் ரயில்வே கேட்டில் இருந்த கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார், உயிரிழந்த தனத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com