பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பைக்கில் சென்ற இருவர் கைது

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பைக்கில் சென்ற இருவர் கைது
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பைக்கில் சென்ற இருவர் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பட்டாக்கத்தையை தரையில் தேய்த்தபடி சென்றதாக போலீசார் இருவரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகைகள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மூன்று நபர்கள் பட்டாகத்தியை தரையில் தேய்த்தபடி சத்தம் போட்டுக் கொண்டே செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், விருத்தாசலம் மேட்டு காலனி. அருண்குமார் (20), நவீன் (18), சுபாஷ் சந்திரபோஸ் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அருண்குமார், சுபாஷ்சந்திர போஸ் ஆகிய இருவர் மீது ஏற்கனவே புது சத்திரம் காவல் நிலையத்தில வழக்கு நிலுவையில் உள்ளதும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார், தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதால் இருவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com