மேலூர்: விடாமல் தொடரும் முன்விரோதம்- வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.!

மேலூர்: விடாமல் தொடரும் முன்விரோதம்- வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.!
மேலூர்: விடாமல் தொடரும் முன்விரோதம்- வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.!

மதுரை மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில், முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், வீட்டின் முன்பிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த போஸ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போஸின் மகன்கள் காவல்துறையில் பணியாற்றும் இருவர், வடிவேல் கார் மீது பாறாங்கற்களை தூக்கி போட்டு நள்ளிரவில் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் போஸின் மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பிணைக்கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில் வடிவேல் வீட்டிற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே நேற்று நள்ளிரவில் புகுந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தங்கள் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றதாக வடிவேல் இன்று காலை மேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கட்டில் மற்றும் சில பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

ஏற்கெனவே முன்விரோதம் காரணமாக வடிவேலை கொலை செய்ய முயற்சித்தவர்களே, இந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடிவேலின் மனைவி கீர்த்திகா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com