போக்ஸோவில் கைதான காவலர் திருநாவுக்கரசு
போக்ஸோவில் கைதான காவலர் திருநாவுக்கரசுpt desk

மயிலாடுதுறை: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... போக்சோவில் காவலர் கைது!

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர் கைது. பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பார் உத்தரவிட்டுள்ளார்
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர், அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சென்னையில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை - பெரம்பூர் காவல் நிலையம்
மயிலாடுதுறை - பெரம்பூர் காவல் நிலையம்pt desk

அதனைத் தொடர்ந்து. மயிலாடுதுறை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலர் திருநாவுக்கரசு மீது புகார் அளித்தார்.

போக்ஸோவில் கைதான காவலர் திருநாவுக்கரசு
கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டர்கள் என்னென்ன..? மிரள வைத்த ஷாக்கிங் ரிப்போர்ட்!

அவரது புகாரின் பேரில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். இதையடுத்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலர் திருநாவுக்கரசை சிறையில் அடைத்தனர்.

போக்ஸோவில் கைதான காவலர் திருநாவுக்கரசு
போக்ஸோவில் கைதான காவலர் திருநாவுக்கரசு

இந்நிலையில் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெரம்பூர் காவல்நிலைய காவலர் திருநாவுக்கரசுவை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com