காதலிக்க மறுத்த பெண்ணை வீடு புகுந்து கடத்திய காதலன் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

காதலிக்க மறுத்த பெண்ணை வீடு புகுந்து கடத்திய காதலன் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

காதலிக்க மறுத்த பெண்ணை வீடு புகுந்து கடத்திய காதலன் - போலீஸ் அதிரடி நடவடிக்கை
Published on

மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் (34). இவர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

இந்நிலையில், விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, அப்பெண்ணின் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை விக்னேஸ்வரன் கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணை கடத்திய நபர்களை தேடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து தப்பியோட முயற்சி செய்த விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com