மத்தூர்: காதலை ஏற்காததால் மாணவி வீட்டிற்கே சென்று ரகளை - தர்ம அடி கொடுத்த மக்கள்!

மத்தூர்: காதலை ஏற்காததால் மாணவி வீட்டிற்கே சென்று ரகளை - தர்ம அடி கொடுத்த மக்கள்!
மத்தூர்: காதலை ஏற்காததால் மாணவி வீட்டிற்கே சென்று ரகளை - தர்ம அடி கொடுத்த மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள், ஊத்தங்கரை காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காவேரிப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரது மகன் விஜய் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடித்து பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, விஜய் கல்லூரி மாணவியிடம் காதலிக்க வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த விஜய் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.

பின்னர் மாணவியின் சொந்த கிராமமான சந்தம்பட்டிக்கு நண்பர்கள் 10 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து மாணவியின் வீட்டருகே ரகளையில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த கிராம மக்கள் அந்த இளைஞர்களை பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் நேரில் விசாரணை நடத்தினார். அதற்கு பின்னர் இளைஞர்களை மீட்டு மத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று, அவர்களிடம் இருந்து பத்து செல்போன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் தாயார் சின்னபாப்பா கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com