சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கொடூரனை கல்லால் அடித்துக்கொன்ற கிராமமக்கள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கொடூரனை கல்லால் அடித்துக்கொன்ற கிராமமக்கள்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கொடூரனை கல்லால் அடித்துக்கொன்ற கிராமமக்கள்

தெலங்கானாவில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நிஷாமாபாத் மாவட்டத்தில் உள்ள தான்கேஷ்சர் (Donkeshwar) கிராமத்தை சேர்ந்தவர் சாயண்ணா (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் உறவினர் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி மட்டும் விட்டில் தனியாக இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த சாயண்ணா அந்த சிறுமிக்கு சாக்லெட்டுக்களை வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி என்று கூட பாராமல் அந்த கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

சிறுமியின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்துள்ளனர். சிறுமிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அழுதுக் கொண்டிருந்தாள். இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் கிராம மக்களுக்கு தெரியவர, சாயண்ணாவை மரத்தில் கட்டி வைத்து கற்கள் மட்டும் குச்சிகளை கொண்டு தாக்கியுள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் சாயண்ணா நினைவிழந்து மயங்கியுள்ளான். இதனையடுத்து சிலர் சாயண்ணாவை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். சாயண்ணாவை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரியவர கிராமத்திற்கு விரைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சாயண்ணாவை தாக்கியவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com